
தமிழ் கத்தோலிக்கன் Tamil Catholican
பிறர்க்கு நன்மை செய்ய தெரிந்திருந்தும் அதை செய்யாமல் இருந்தால் அதுவும் பாவம்.
Sunday, 22 January 2012
விபத்துக்குள்ளான இத்தாலி கப்பலில் தமிழர்!
சென்ற வாரம் இத்தாலியில் 4200 பேருடன் சென்ற ஐம்பது லட்சம் அமரிக்க டாலர் விலையுள்ள ஐந்து வருடமேயான மிகவும் நவீன கப்பல் "தீவிற்கு மிக அருகில் சென்று, அங்குள்ள மக்களுக்கு கையசைத்து செல்லவேண்டுமென்ற கப்பலோட்டியின் விபரீத ஆசையால்" தறைதட்டி விபத்துக்குள்ளானதில் ஒரு தமிழரும் இருந்துள்ளார். இவர் குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் தட்டான் விளையை சேர்ந்த சுவாமிநாடார் மகன் சந்தோஸ் குமார் ஆவார்! இவர் விபத்திலிருந்து தப்பி நேற்று தனது சொந்த ஊர் வந்து சேர்ந்தார். இவரை குடும்பத்தினர் கண்ணீர் மல்க வரவேற்றனர்!
இக்கப்பலில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானவர்கள் காப்பாற்றப்பட்டுவிட்டனர். இறந்தவர்களின் எண்ணிக்கை 13. இன்னும் இருபது பேரை காணவில்லை. மீட்புப்பணியினர் தொடர்ந்து அவர்களை தேடி வருகின்றனர். திரு சந்தோஸ் குமார் ஐந்து வருடங்களாக இக்கப்பலில் பணிபுரிந்து வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை அரசியல்வாதிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் சென்று நலம் விசாரித்து வருகின்ற
னர்.


படங்கள்: மணவை மலர்
Monday, 5 December 2011
தடையில்லா நிரந்தர இலவச மின்சாரம்!
தடையில்லா நிரந்தர இலவச மின்சாரம்!
அணுமின்சாரம் வேண்டுமா? வேண்டாமா? என காரசாரமாக விவாதித்து வரும் இவ்வேளையில் இந்த தடையில்லா நிரந்தர இலவச மின்சாரத்தை பற்றிய பதிவு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.
இன்று வருடத்தின் பெரும்பாலான நாட்கள் சூரிய ஒளியையே காண முடியாத ஐரோப்பிய நாடுகளில், சூரிய கதிர்களால் செயல்படும் மின்சார சக்தியை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார்கள். இங்கு இங்கிலாந்தில் இது பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. தமிழகமோ அனல் பறக்கும் சூரிய ஒளிக்கதிர்களை கொண்டிருந்தும் இந்த சூரிய ஒளிக்கதிர்களால் இயங்கும் மின்சாரத்தை அமல்படுத்தவில்லை. ஒரு சதுர மீட்டர் கொள்ளளவில் படுகின்ற சூரிய ஒளிக்கதிரால் ஒரு நாளைக்கு 1௦௦௦ வாட்ஸ் மின்சாரத்தை பெற முடியும். இதற்கு நாம் சோலார் பனல் எனப்படும் தகடுகளை நம் வீட்டின் கூரையிலோ அல்லது நன்கு சூரிய ஒளிக்கதிர்கள் படும் இடத்திலோ பொருத்தினால் போதும்.
இதனால் சாதாரணமாக ஒரு வீட்டிற்கு தேவைப்படும் மின்சாரத்தை பெற முடியும். ஆனால் Air conditioner போன்ற அதிக மின்சாரம் தேவைப்படும் இடங்களுக்கு இவையால் முழு மின்சாரத்தையும் வழங்க முடியாது. இங்கிலாந்தில் நம் வீட்டில் நாம் உற்பத்தி செய்யும் மின்சாரத்திற்கு அரசே பணம் தருகிறது. அதாவது நாம் பயன்படுத்தும் மின்சாரத்திற்கும் சேர்த்து.
இங்கிலாந்தில் இதன் வருமானத்தை கருத்தில் கொண்டு, பெரிய நிறுவனங்கள் வீட்டின் கூரைகளை ஒப்பந்த்தபடி பெற்று அதில் இந்த சோலார் பனல்களை நிறுவி, அதிலிருந்து வரும் வருமானத்தை பெற்றுக் கொள்கிறார்கள். வீட்டின் உரிமையாளர் தேவையான மின்சாரத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.
நாமும் இத்திட்டத்தை அமல் படுத்தினால் அரசின் மின்சாரத்தையே சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. காற்றாலை மூலம் தயாரிக்கப்படும் மின்சாரம் நன்கு காற்று வீசினால்தான் நிறைய உற்பத்தியாகும். ஆனால் சூரிய ஒளிக்கதிர்கள் என்றுமே அடிப்பதால் தினமும் இது மின்சாரத்தை உற்பத்தி செய்யும். இதன் ஒரே பிரச்சினை என்னவென்றால், இதன் ஆரம்ப கட்ட முதலீடு அதிகமாக இருக்கும். இதற்கு இந்தியாவில் எவ்வளவு பணம் ஆகும் என தெரியவில்லை. இங்கிலாந்தில் சுமார் பத்து லட்சம் ரூபாயாகிறது.
இனி இது செயல்படும் விதத்தை பார்ப்போம்:
இந்த சோலார் தகடுகள் சூரிய ஒளியை DC கரண்ட்டாக மாற்றி விடும். பின்னர் இது நம் உபயோகத்திற்கு தேவையான AC கரண்ட்டாக மாற்றப்பட்டு நம் வீட்டில் ஏற்கனவே இருக்கிற Switch board இல் இணைக்கப்படும். இது உற்பத்தி செய்கின்றதைவிட அதிக மின்சாரம் தேவைப்பட்டால், அது அரசின் மின்சாரத்தை எடுத்துக்கொள்ளும். அதே சமயம் நம் தேவையைவிட அதிகமாக வரும் மின்சாரம், அரசின் மின் கம்பத்திற்கு மீட்டரின் வழியே சென்று விடும். இதனால் நாம் அரசிற்கு எவ்வளவு மின்சாரம் வழங்கியுள்ளோம் என தெரிந்து கொள்ளலாம். அதற்கான பணத்தை அரசு வழங்கிவிடும்.
தமிழகத்தில் எதையெல்லாமோ இலவசமாக வழங்குகிறார்கள். இப்படி உருப்படியானவற்றை இலவசமாக வழங்கலாம்! அல்லது மானியங்கள் கொடுக்கலாம். மிச்சி, கிரைண்டர் என கொடுத்து விட்டு மின்சாரத்தை சரியாக வழங்கமாட்டார்கள்! தமிழக முதல்வர் ஜெயலலிதா, என்ன புரட்சியை செய்து புரட்சி தலைவி என்ற பட்டத்தை பெற்றாரோ தெரியவில்லை. இந்த மின் திட்டத்தை அமல் படுத்தி உண்மையிலேயே புரட்சி தலைவி ஆவாரா?
பின்குறிப்பு: இந்த பதிவை யார் வேண்டுமானாலும் தங்கள் வலைத்தளத்தில் வெளியிடலாம். இது பலரையும் சென்றடையவேண்டும் என்பதே என் நோக்கம்.
அணுமின்சாரம் வேண்டுமா? வேண்டாமா? என காரசாரமாக விவாதித்து வரும் இவ்வேளையில் இந்த தடையில்லா நிரந்தர இலவச மின்சாரத்தை பற்றிய பதிவு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.
இன்று வருடத்தின் பெரும்பாலான நாட்கள் சூரிய ஒளியையே காண முடியாத ஐரோப்பிய நாடுகளில், சூரிய கதிர்களால் செயல்படும் மின்சார சக்தியை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார்கள். இங்கு இங்கிலாந்தில் இது பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. தமிழகமோ அனல் பறக்கும் சூரிய ஒளிக்கதிர்களை கொண்டிருந்தும் இந்த சூரிய ஒளிக்கதிர்களால் இயங்கும் மின்சாரத்தை அமல்படுத்தவில்லை. ஒரு சதுர மீட்டர் கொள்ளளவில் படுகின்ற சூரிய ஒளிக்கதிரால் ஒரு நாளைக்கு 1௦௦௦ வாட்ஸ் மின்சாரத்தை பெற முடியும். இதற்கு நாம் சோலார் பனல் எனப்படும் தகடுகளை நம் வீட்டின் கூரையிலோ அல்லது நன்கு சூரிய ஒளிக்கதிர்கள் படும் இடத்திலோ பொருத்தினால் போதும்.
இதனால் சாதாரணமாக ஒரு வீட்டிற்கு தேவைப்படும் மின்சாரத்தை பெற முடியும். ஆனால் Air conditioner போன்ற அதிக மின்சாரம் தேவைப்படும் இடங்களுக்கு இவையால் முழு மின்சாரத்தையும் வழங்க முடியாது. இங்கிலாந்தில் நம் வீட்டில் நாம் உற்பத்தி செய்யும் மின்சாரத்திற்கு அரசே பணம் தருகிறது. அதாவது நாம் பயன்படுத்தும் மின்சாரத்திற்கும் சேர்த்து.
இங்கிலாந்தில் இதன் வருமானத்தை கருத்தில் கொண்டு, பெரிய நிறுவனங்கள் வீட்டின் கூரைகளை ஒப்பந்த்தபடி பெற்று அதில் இந்த சோலார் பனல்களை நிறுவி, அதிலிருந்து வரும் வருமானத்தை பெற்றுக் கொள்கிறார்கள். வீட்டின் உரிமையாளர் தேவையான மின்சாரத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.
நாமும் இத்திட்டத்தை அமல் படுத்தினால் அரசின் மின்சாரத்தையே சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. காற்றாலை மூலம் தயாரிக்கப்படும் மின்சாரம் நன்கு காற்று வீசினால்தான் நிறைய உற்பத்தியாகும். ஆனால் சூரிய ஒளிக்கதிர்கள் என்றுமே அடிப்பதால் தினமும் இது மின்சாரத்தை உற்பத்தி செய்யும். இதன் ஒரே பிரச்சினை என்னவென்றால், இதன் ஆரம்ப கட்ட முதலீடு அதிகமாக இருக்கும். இதற்கு இந்தியாவில் எவ்வளவு பணம் ஆகும் என தெரியவில்லை. இங்கிலாந்தில் சுமார் பத்து லட்சம் ரூபாயாகிறது.
இனி இது செயல்படும் விதத்தை பார்ப்போம்:
இந்த சோலார் தகடுகள் சூரிய ஒளியை DC கரண்ட்டாக மாற்றி விடும். பின்னர் இது நம் உபயோகத்திற்கு தேவையான AC கரண்ட்டாக மாற்றப்பட்டு நம் வீட்டில் ஏற்கனவே இருக்கிற Switch board இல் இணைக்கப்படும். இது உற்பத்தி செய்கின்றதைவிட அதிக மின்சாரம் தேவைப்பட்டால், அது அரசின் மின்சாரத்தை எடுத்துக்கொள்ளும். அதே சமயம் நம் தேவையைவிட அதிகமாக வரும் மின்சாரம், அரசின் மின் கம்பத்திற்கு மீட்டரின் வழியே சென்று விடும். இதனால் நாம் அரசிற்கு எவ்வளவு மின்சாரம் வழங்கியுள்ளோம் என தெரிந்து கொள்ளலாம். அதற்கான பணத்தை அரசு வழங்கிவிடும்.
தமிழகத்தில் எதையெல்லாமோ இலவசமாக வழங்குகிறார்கள். இப்படி உருப்படியானவற்றை இலவசமாக வழங்கலாம்! அல்லது மானியங்கள் கொடுக்கலாம். மிச்சி, கிரைண்டர் என கொடுத்து விட்டு மின்சாரத்தை சரியாக வழங்கமாட்டார்கள்! தமிழக முதல்வர் ஜெயலலிதா, என்ன புரட்சியை செய்து புரட்சி தலைவி என்ற பட்டத்தை பெற்றாரோ தெரியவில்லை. இந்த மின் திட்டத்தை அமல் படுத்தி உண்மையிலேயே புரட்சி தலைவி ஆவாரா?
பின்குறிப்பு: இந்த பதிவை யார் வேண்டுமானாலும் தங்கள் வலைத்தளத்தில் வெளியிடலாம். இது பலரையும் சென்றடையவேண்டும் என்பதே என் நோக்கம்.
Friday, 23 September 2011
தமிழ் மொழி!
தமிழ் மொழி!
தடுக்கி விழுந்தால் மட்டும் அ..ஆ...
சிரிக்கும் போது மட்டும் இ.. ஈ....
சூடு பட்டால் மட்டும் உ..ஊ...
அதட்டும் போது மட்டும் எ.. ஏ...
ஐயத்தின் போது மட்டும் ஐ...
ஆச்சர்யத்தின் போது மட்டும் ஒ..ஓ...
வக்கணையின் போது மட்டும் ஔ...
விக்கலின் போது மட்டும் .'. ...
என்று தமிழ் பேசி, மற்ற நேரம் வேற்று மொழி பேசும்
தமிழர்களிடம் மறக்காமல் சொல்!
உன் மொழி தமிழ் மொழியென்று!!
பேஸ் புக்கில் படித்தது. இதன் உண்மையான படைப்பாளிக்கு நன்றியும் வாழ்த்துக்களும்!
தடுக்கி விழுந்தால் மட்டும் அ..ஆ...
சிரிக்கும் போது மட்டும் இ.. ஈ....
சூடு பட்டால் மட்டும் உ..ஊ...
அதட்டும் போது மட்டும் எ.. ஏ...
ஐயத்தின் போது மட்டும் ஐ...
ஆச்சர்யத்தின் போது மட்டும் ஒ..ஓ...
வக்கணையின் போது மட்டும் ஔ...
விக்கலின் போது மட்டும் .'. ...
என்று தமிழ் பேசி, மற்ற நேரம் வேற்று மொழி பேசும்
தமிழர்களிடம் மறக்காமல் சொல்!
உன் மொழி தமிழ் மொழியென்று!!
பேஸ் புக்கில் படித்தது. இதன் உண்மையான படைப்பாளிக்கு நன்றியும் வாழ்த்துக்களும்!
Wednesday, 22 June 2011
நன்றி கெட்ட நாயே! (உங்களை சொல்லவில்லை)
நன்றி கெட்ட நாயே!
மனிதர்கள் சில நேரங்களில் நன்றி கெட்டவர்களாக மாறினால், இப்படி "நன்றி கெட்ட நாயே!" என திட்டுவதை கேட்டிருப்போம். உண்மையிலேயே நாய் நன்றி கெட்டதா?
சுமார் 30 வருடங்களுக்கு முன்பு நான் சிறுவனாக இருக்கும் போது கேள்விபட்ட ஒரு உண்மை சம்பவம். நடந்த நாடு மற்றும் சம்பந்தபட்டவர்களின் பெயர் எல்லாம் எனக்கு மறந்து விட்டது. சம்பவத்தை மட்டும் சொல்கிறேன்.
ஒரு பெரிய செல்வந்தருக்கு ஒரு செல்ல நாய் இருந்ததாம். இது யார் இவரை தேடி வந்தாலும் குரைக்குமாம். அந்த எச்சரிக்கையையும் மீறி உள்ளே சென்றால் கடித்து விடுமாம். இதனால் அந்த செல்வந்த்தரின் நண்பர்கள் எல்லோருமே இவரிடம் குறைபட்டுக் கொண்டார்களாம். இதை கேட்ட செல்வந்தருக்கு ஒரு விபரீத எண்ணம் தோன்றியதாம். தான் மாறு வேடத்தில் வந்தால் என்னவாகுமென!
இதன்படி வெளியே சென்ற அந்த செல்வந்த்தர், மாறு வேடத்தில் வீட்டிற்கு வந்த்துள்ளார்.(கூடவே நாய் கடித்துவிட்டால் முதலுதவிக்கான ஏற்பாட்டுடன்) நாய் வேறு யாரோ என நினைத்து குரைத்துள்ளது. இவர் அதையும் மீறி உள்ளே நுழைந்துள்ளார். அவ்வளவுதான், நாய் அவரை கடித்துள்ளது. சுதாகரித்துக்கொண்ட அவர், அந்த நாயின் முன்னே தன் மாறு வேஷத்தை கலைத்துள்ளார். இதை கண்ட நாய் உடனே கீழே விழுந்த்ததாம். அவசரமாக நாயை மருத்துவ மனைக்கு எடுத்து சென்றிருக்கிறார் அந்த செல்வந்தர். அதை பரிசோதித்து பார்த்த மருத்துவர், நாய் அதன் இதயம் வெடித்து இறந்த்துள்ளதாக சொன்னாராம்.
பாருங்கள், எவ்வளவு நன்றியுள்ளதென! எனவே, "நன்றி கெட்ட நாயே" என சொல்லலாமா? நாயை நன்றிக்கு இலக்கணமாகத்தானே சொல்லவேண்டும்.
மனிதர்கள் சில நேரங்களில் நன்றி கெட்டவர்களாக மாறினால், இப்படி "நன்றி கெட்ட நாயே!" என திட்டுவதை கேட்டிருப்போம். உண்மையிலேயே நாய் நன்றி கெட்டதா?
சுமார் 30 வருடங்களுக்கு முன்பு நான் சிறுவனாக இருக்கும் போது கேள்விபட்ட ஒரு உண்மை சம்பவம். நடந்த நாடு மற்றும் சம்பந்தபட்டவர்களின் பெயர் எல்லாம் எனக்கு மறந்து விட்டது. சம்பவத்தை மட்டும் சொல்கிறேன்.
ஒரு பெரிய செல்வந்தருக்கு ஒரு செல்ல நாய் இருந்ததாம். இது யார் இவரை தேடி வந்தாலும் குரைக்குமாம். அந்த எச்சரிக்கையையும் மீறி உள்ளே சென்றால் கடித்து விடுமாம். இதனால் அந்த செல்வந்த்தரின் நண்பர்கள் எல்லோருமே இவரிடம் குறைபட்டுக் கொண்டார்களாம். இதை கேட்ட செல்வந்தருக்கு ஒரு விபரீத எண்ணம் தோன்றியதாம். தான் மாறு வேடத்தில் வந்தால் என்னவாகுமென!
இதன்படி வெளியே சென்ற அந்த செல்வந்த்தர், மாறு வேடத்தில் வீட்டிற்கு வந்த்துள்ளார்.(கூடவே நாய் கடித்துவிட்டால் முதலுதவிக்கான ஏற்பாட்டுடன்) நாய் வேறு யாரோ என நினைத்து குரைத்துள்ளது. இவர் அதையும் மீறி உள்ளே நுழைந்துள்ளார். அவ்வளவுதான், நாய் அவரை கடித்துள்ளது. சுதாகரித்துக்கொண்ட அவர், அந்த நாயின் முன்னே தன் மாறு வேஷத்தை கலைத்துள்ளார். இதை கண்ட நாய் உடனே கீழே விழுந்த்ததாம். அவசரமாக நாயை மருத்துவ மனைக்கு எடுத்து சென்றிருக்கிறார் அந்த செல்வந்தர். அதை பரிசோதித்து பார்த்த மருத்துவர், நாய் அதன் இதயம் வெடித்து இறந்த்துள்ளதாக சொன்னாராம்.
பாருங்கள், எவ்வளவு நன்றியுள்ளதென! எனவே, "நன்றி கெட்ட நாயே" என சொல்லலாமா? நாயை நன்றிக்கு இலக்கணமாகத்தானே சொல்லவேண்டும்.
Tuesday, 24 May 2011
வங்கியில் நீங்கள் கடன் வாங்கியவர்களா?
வங்கியில் நீங்கள் கடன் வாங்கியவர்களா?
இங்க்லாந்து, ஸ்காட்லாந்து, வட அயர்லாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய நாடுகளில் உள்ள வங்கிகளில், அல்லது நிதி நிறுவனங்களில் நீங்கள் கடன் வாங்கியிருந்தீர்கள் எனில், அந்த கடத்திற்கு காப்பீடு என சொல்லி, அல்லது சொல்லாமல் ஒரு தொகையை உங்களிடம் வசூலித்திருப்பார்கள். இது கண்டிப்பாக செலுத்த வேண்டும் என சட்டம் ஒன்றும் கிடையாது. இதை வங்கிகளும் நிதி நிறுவனங்களும் தவறாக பயன்படுத்தி தங்களின் வாடிக்கையாளர்களிடம் பெரும் தொகையை கொள்ளை அடித்துள்ளார்கள்! இதற்கு எதிராக நீதி மன்றத்தில் இப்போது தீர்ப்பு வந்துள்ளது. அதாவது வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் இப்படி வாடிக்கையாளர்களிடம் காப்பீடு என கறந்த பணத்தை திரும்ப கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
உதாரணமாக £6000.00 கடன் வாங்கியிருந்தால் சுமார் £850.00 நீங்கள் காப்பீடாக செலு த்தியிருப்பீர்கள். இப்போது இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி "கிளைம்ஸ் மேனேஜ்மென்ட் கம்பெனி" என அறியப்படும் நிறுவனங்கள் இப்படி பாதிக்கப்பட்டவர்களை குறிவைத்து அவர்களை தொடர்பு கொள்ளும்படி விளம்பரம் செய்கிறார்கள். தொலைகாட்சியை திறந்தாலே இவர்களின் விளம்பரம்தான். சும்மா இரண்டு காகிதங்களில் நிரப்பி விண்ணப்பிக்க வேண்டிய எளிதான வேலை இது. இதை செய்து தருகிறோம் என சொல்லி, இருபத்தைந்து சதவீதம் பணம் அதிலிருந்து பறித்து விடுவார்கள்.
இந்த "கிளைம்ஸ் மேனேஜ்மென்ட் கம்பெனி" சண்டை போட்டு ஒன்றும் வாங்கி தர வேண்டியதில்லை. காரணம் இதற்கு நாமே விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அனுப்பினால் போதும். நிச்சயமாக நிறைய தமிழர்கள் இப்படி வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களில் கடனை இந்த காப்பீடு கொடுத்தே வாங்கியிருப்பார்கள். அவர்களுக்கு அந்த பணம் திரும்ப கிடைக்கும்.
இதற்கான விண்ணப்ப படிவத்தின் இணைப்பை கீழே கொடுத்துள்ளேன். இந்த இணைப்பில் சென்று அதில் consumer questionnaire என்பதை சொடுக்கி தரவிறக்கம் செய்து விண்ணப்பிக்கவும்.
இந்த படிவத்தை பூர்த்தி செய்து நீங்கள் எந்த வங்கி அல்லது நிதி நிறுவனத்தில் கடன் பெற்றிருந்த்தீர்களோ, அவர்களுக்கு அனுப்பிக்கொடுக்கவும். தேவையில்லாமல் உங்களிடம் வசூலித்த காப்பீடு தொகையை திரும்ப தந்து விடுவார்கள். இது விசயமாக மேலதிக விபரங்களுக்கு அருகிலுள்ள "சிட்டிசென் அட்வைஸ் பீரோ" வை தொடர்பு கொள்ளுங்கள்.
இங்க்லாந்து, ஸ்காட்லாந்து, வட அயர்லாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய நாடுகளில் உள்ள வங்கிகளில், அல்லது நிதி நிறுவனங்களில் நீங்கள் கடன் வாங்கியிருந்தீர்கள் எனில், அந்த கடத்திற்கு காப்பீடு என சொல்லி, அல்லது சொல்லாமல் ஒரு தொகையை உங்களிடம் வசூலித்திருப்பார்கள். இது கண்டிப்பாக செலுத்த வேண்டும் என சட்டம் ஒன்றும் கிடையாது. இதை வங்கிகளும் நிதி நிறுவனங்களும் தவறாக பயன்படுத்தி தங்களின் வாடிக்கையாளர்களிடம் பெரும் தொகையை கொள்ளை அடித்துள்ளார்கள்! இதற்கு எதிராக நீதி மன்றத்தில் இப்போது தீர்ப்பு வந்துள்ளது. அதாவது வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் இப்படி வாடிக்கையாளர்களிடம் காப்பீடு என கறந்த பணத்தை திரும்ப கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
உதாரணமாக £6000.00 கடன் வாங்கியிருந்தால் சுமார் £850.00 நீங்கள் காப்பீடாக செலு த்தியிருப்பீர்கள். இப்போது இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி "கிளைம்ஸ் மேனேஜ்மென்ட் கம்பெனி" என அறியப்படும் நிறுவனங்கள் இப்படி பாதிக்கப்பட்டவர்களை குறிவைத்து அவர்களை தொடர்பு கொள்ளும்படி விளம்பரம் செய்கிறார்கள். தொலைகாட்சியை திறந்தாலே இவர்களின் விளம்பரம்தான். சும்மா இரண்டு காகிதங்களில் நிரப்பி விண்ணப்பிக்க வேண்டிய எளிதான வேலை இது. இதை செய்து தருகிறோம் என சொல்லி, இருபத்தைந்து சதவீதம் பணம் அதிலிருந்து பறித்து விடுவார்கள்.
இந்த "கிளைம்ஸ் மேனேஜ்மென்ட் கம்பெனி" சண்டை போட்டு ஒன்றும் வாங்கி தர வேண்டியதில்லை. காரணம் இதற்கு நாமே விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அனுப்பினால் போதும். நிச்சயமாக நிறைய தமிழர்கள் இப்படி வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களில் கடனை இந்த காப்பீடு கொடுத்தே வாங்கியிருப்பார்கள். அவர்களுக்கு அந்த பணம் திரும்ப கிடைக்கும்.
இதற்கான விண்ணப்ப படிவத்தின் இணைப்பை கீழே கொடுத்துள்ளேன். இந்த இணைப்பில் சென்று அதில் consumer questionnaire என்பதை சொடுக்கி தரவிறக்கம் செய்து விண்ணப்பிக்கவும்.
இந்த படிவத்தை பூர்த்தி செய்து நீங்கள் எந்த வங்கி அல்லது நிதி நிறுவனத்தில் கடன் பெற்றிருந்த்தீர்களோ, அவர்களுக்கு அனுப்பிக்கொடுக்கவும். தேவையில்லாமல் உங்களிடம் வசூலித்த காப்பீடு தொகையை திரும்ப தந்து விடுவார்கள். இது விசயமாக மேலதிக விபரங்களுக்கு அருகிலுள்ள "சிட்டிசென் அட்வைஸ் பீரோ" வை தொடர்பு கொள்ளுங்கள்.
Subscribe to:
Posts (Atom)





